தனியார் மருத்துவமனையில் பெண்ணிடம் 3 பவுன் செயின் திருட்டு

published 1 year ago

தனியார் மருத்துவமனையில் பெண்ணிடம்  3 பவுன் செயின் திருட்டு

கோவை:கோவை கணபதியே சேர்ந்தவர் விமல் குமார்(62). பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். இவருடைய தாய்க்கு உடல் நிலை சரியில்லாததால் அவரை தான் வேலை பார்க்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

அவர் மருத்துவமனை அறையில் தனியாக இருக்கும் போது காலை 10.20 மணியளவில் திடீரென ஒரு நபர் அங்கு வந்தார். அவர் தன்னை பிசியோதேரபிஸ்ட் என கூறி உங்களை பரிசோதனை செய்ய வேண்டும், உங்கள் கழுத்தில் உள்ள தங்க செயினை கழட்டி வைத்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனை நம்பிய விமல் குமாரின் தாய் செயினை கழட்டி வைத்துள்ளார். அப்போது அந்த நபர் 3 பவுன் தங்க செயினை நைசாக திருடி சென்று விட்டார். இது குறித்து விமல் குமார் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe