கோவையில் இரவுக்காட்சிக்கு படத்திற்கு சென்ற வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.90,000 பறிப்பு…

published 1 year ago

கோவையில் இரவுக்காட்சிக்கு படத்திற்கு சென்ற வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.90,000 பறிப்பு…

கோவை: கோவையில் இரவுக்காட்சிக்கு படத்திற்கு சென்ற வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.90 பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை பொன்னயராஜபுரத்தை சேர்ந்தவர் யுகல் (வயது 28). இவர் வயர் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களுடன் ரேஸ்கோர்ஸ் அருகே உள்ள தியேட்டரில் படம் பார்க்க சென்றார். படம் முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றார். 

அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டிய யுகல் இடமிருந்து ரூ.90 ஆயிரம் பணத்தை பறித்து தப்பிச் செண்றனர். இதுகுறித்து யுகல் ரோஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வயர் கடை உரிமையாளரிடம் ரூ.90 ஆயிரம் பணத்தை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe