பைக்கில் பயணித்து கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு...

published 1 year ago

பைக்கில் பயணித்து கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு...

கோவை: வீரியம் பாளையம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் மனைவி முத்துக்கனி (47).; இவரும் இவர் கணவரும் சமூக சேவை செய்து வருகின்றனர்.  நேற்று இவர்கள் இருவரும் பைக்கில் கோவை பீளமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது தனியார் கல்லூரி அருகே சென்ற போது பின்னால் பைக்கில் வந்த இரண்டு பேரில் ஒருவர் முத்துக்கனி கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை பறித்தார். ஆனால் முத்துக்கனி நகையின் ஒரு பகுதியை விடாமல் பிடித்துக் கொண்டார் இன்னொரு பகுதியை திருடர்கள் பறித்து சென்றனர். இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு அடிப்படையில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடர்கள் சுமார் 4 பவுன் தங்க நகை பறித்து தப்பியுள்ளதாக தெரிகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe