பிரதம மந்திரி யோஜனா திட்டம் என்ற குறுந்தகவல் மூலம் மோசடி- பாதிகப்பட்டவர் புகார்- பொதுமக்களே உஷார்...

published 1 year ago

பிரதம மந்திரி யோஜனா திட்டம் என்ற குறுந்தகவல் மூலம் மோசடி- பாதிகப்பட்டவர் புகார்- பொதுமக்களே உஷார்...

கோவை: கோவை கணபதி மணியக்காரம் பாளையத்தை சேர்ந்தவர் அருண்(47). இவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. அதில், பிரதம மந்திரி யோஜனா திட்டத்தில் வியாபார கடன் ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 50 லட்சம் வரை பெற்று தரப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்காக அதில் உள்ள நம்பரை தொடர்பு கொண்டு அருண் பேசினார். எதிர்முனையில் பேசியவர் தன்னை கிருத்திகா எனவும், பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் அறிமுகப்படுத்தி கொண்டார். தொடர்ந்து அவர் கடன் பெறுவதற்காக உங்களது ஆதார் கார்டு, வங்கி விவரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டு கொண்டார். அதன்படி அருண் தனது விவரங்களை அனுப்பி வைத்தார். மீண்டும் தொடர்பு கொண்ட அந்த பெண் உங்களது வங்கி விவரங்களை ஆய்வு செய்த போது ரூ.20 லட்சம் கடன் வாங்க தகுதி உள்ளது என தெரிவித்தார். மேலும் பிராசசிங் கட்டணம், ஜிஎஸ்டி, இன்சூரன்ஸ் என கூறி பணம் அனுப்புமாறு கூறினார். இதனை நம்பிய அருண் பல்வேறு கட்டங்களாக அவர் கூறிய வங்கி கணக்குகளில் ரூ. 7.16 லட்சம் அனுப்பினார். ஆனால் அதன்பின்பு அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. லோன் வாங்கி தருவதாக ரூ. 7.16 லட்சத்தை மோசடி செய்து விட்டார். 

இது குறித்து அருண் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe