இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி கணவனை இழந்த இளம்பெண்ணிடம் 16.43 லட்சம் மோசடி...

published 1 year ago

இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி கணவனை இழந்த இளம்பெண்ணிடம் 16.43 லட்சம் மோசடி...

கோவை: லண்டன் விமானி என்று இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி கணவனை இழந்த இளம்பெண்ணிடம் ரூ. 16.43 லட்சம் மோசடி நடைபெற்றது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் 32 வயது பெண். பிஎஸ்சி பட்டதாரி. இவரது கணவர் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இந்தநிலையில், இன்ஸ்டாகிராம் மூலமாக அந்த பெண்ணுக்கு ஒரு நபர் அறிமுகமானார். அவர் தான் லண்டனில் விமானியாக பணிபுரிவதாக தெரிவித்தார். இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராம் மூலமாக தகவல்களை பரிமாறிக்கொண்டனர். செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்டும் பேசி வந்ததாக தெரிகிறது. அப்போது அந்த நபர் தனது மனைவி இறந்து விட்டதாகவும், அதனால் இந்திய பெண்ணை மணமுடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா வந்து அந்த பெண்ணை சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இதனைத்தொடர்ந்து மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர் ரூ. 68 லட்சம் மதிப்பிலான பரிசுப்பொருட்களுடன் டெல்லி விமான நிலையம் வந்ததாகவும், தன்னிடம் இந்திய பணம் இல்லை எனவும், பணம் அனுப்பி வைத்தால் கோவை வந்து பரிசுப்பொருட்களுடன் உங்களை வந்து சந்திப்பதாகவும் தெரிவித்தார். இதனை நம்பிய அந்த பெண் அந்த நபர் கூறிய பல்வேறு வங்கி கணக்குகளில் ரூ. 16.43 லட்சம் அனுப்பி வைத்தார். ஆனால் அதன் பின்பு அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. மொத்தமாக பணத்தை சுருட்டி விட்டார். இதனால் ஏமாற்றமடைந்த அந்த பெண் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி ஆசாமி குறித்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe