கோவையில் சிக்கன் வாங்கி ரூ. 47.37 லட்சம் மோசடி

published 1 year ago

கோவையில் சிக்கன் வாங்கி ரூ. 47.37 லட்சம் மோசடி

கோவை: கோவையில் சிக்கன் வாங்கி ரூ. 47.37 லட்சம் மோசடி நடைபெற்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கலைக்கல்லூரி அருகே சிக்கன் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பழக்குமரன்(39) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

சிக்கன் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கோவையை சேர்ந்த வியாபாரி செந்தில்மோகன்(40) என்பவர் சிக்கன் வாங்கி வந்தார். அதற்குண்டான பணத்தை மொத்தமாக கொடுத்து விடுவதாக தெரிவித்தார்.

இதனை நம்பி அவரிடம் தற்போது வரை ரூ. 47.37 லட்சம் மதிப்பிற்கு சிக்கன் விற்பனை செய்துள்ளோம். அதற்குண்டான பணத்தை திருப்பி கேட்டபோது விரைவில் கொடுத்து விடுவதாக உறுதி அளித்தார். ஆனால் பலமுறை கேட்டும் பணம் கொடுக்காமல் பல காரணங்களை கூறி தட்டி கழித்து வருகிறார்.

எனவே அவரிடமிருந்து பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்திருந்தார். அதன்பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் செந்தில்மோகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe