அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

published 1 year ago

அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கோவை: தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோர்க்கு திருவள்ளுவர் திருநாளில் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிடுள்ள அறிக்கையில்,

2023-2024 ஆம் நிதியாண்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2023ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோர்க்கு திருவள்ளுவர் திருநாளில் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, கோயம்புத்தூர் மாவட்டத்தில் இவ்விருதுக்கு தகுதியான நபர்கள் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்படிவங்களை பெற்று 10.11.2023 க்குள் விண்ணப்பிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe