கஞ்சா விற்ற 4 பேர் கைது...

published 1 year ago

கஞ்சா விற்ற 4 பேர் கைது...

கோவை: கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கோவைப்புதூரில் உள்ள கல்லூரி பின்புறம் சிலர் சந்தேகம்படும் படி நின்றிருந்தனர். 

அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். விசாரணையில், அவர்கள் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தொண்டாமுத்தூர் பூசாரி பாளையத்தை சேர்ந்த கோபி(22), மதுக்கரை அண்ணாநகரை சேர்ந்த மிதுன்குமார்(18), தருண்குமார்(19), குனியமுத்தூர் கரும்புக்கடையை சேர்ந்த முகமது உசைன்(40), ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 340 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 8 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe