கோவையில் ஊழலுக்கு எதிராக ஒலித்த குரல்கள்

published 1 year ago

கோவையில் ஊழலுக்கு எதிராக ஒலித்த குரல்கள்

ஊழலுக்கு எதிராக கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியர்கள் கலந்து கொண்டு லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு கோவையில் ஓரியண்டல் மற்றும் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனங்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற இந்த பேரணியை  யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் மண்டல மேலாளர் சந்தீப் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணியாக சென்றனர். மேலும், ஊழலை எதிர்ப்போம் என்ற கோஷங்களை எழுப்பினர். ரேஸ்கோர்ஸ் ஜோன் 1ல் தொடங்கிய இந்த பேரணி, ரேஸ்கோர்ஸ் ரவுண்டானாவை சுற்றி மீண்டும் ஜோன் 1ல் முடிவடைந்தது.

இதுகுறித்து ஓரியண்டல்  நிறுவனத்தின் மண்டல மேலாளர் ரவி கூறுகையில், "ஊழலுக்கு எதிராக செயல்பட்டு நாட்டை காப்போம் என்ற பிரதமரின் அறிவுரையின் பேரில் இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளோம். ஊழலால் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. நல்ல வளர்ச்சி பெற ஊழலை ஒழிக்க வேண்டும். இதுகுறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு இந்த பேரணி நடத்தப்பட்டுள்ளது." என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe