பீளமேட்டில் தூங்கிக்கொண்டிருந்த சர்வரை எழுப்பி ராட்டால் தாக்கிய கும்பல்…

published 1 year ago

பீளமேட்டில் தூங்கிக்கொண்டிருந்த சர்வரை எழுப்பி ராட்டால் தாக்கிய கும்பல்…

கோவை: ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர்(30). இவர் கடந்த 2 மாதங்களாக கோவை பீளமேட்டில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி உள்ளார். சாலை பணி சர்வேயராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் விடுதியில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் காலிங் பெல் அடித்தனர். சத்தம் கேட்டு எழுந்த சந்திரசேகர் கதவை திறந்தார். உள்ளே நுழைந்த 2 பேரும் தகாத வார்த்தைகளால் பேசி சந்திரசேகரை அலுமினிய ராடால் சரமாரியாக தாக்கினர்.

இதில் அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. பின்னர் மர்ம நபர்கள் இருவரும் அவரை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பினர். சத்தம் கேட்டு வந்த பக்கத்து அறையை சேர்ந்தவர்கள் தாக்குதலில் காயமடைந்த சர்வேயர் சந்திரசேகரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும் உண்மையான காரணம் என்ன? அந்த 2 பேர் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe