கோவை மண்டலத்திற்கு கூடுதல் தொழிலாளர் ஆணையர் நியமனம்

published 1 year ago

கோவை மண்டலத்திற்கு கூடுதல் தொழிலாளர் ஆணையர் நியமனம்

கோவை: கோவை மண்டலத்தின் புதிய கூடுதல் தொழிலாளர் ஆணையராக சாந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோவை மண்டல தொழிலாளர் ஆணையரகம் கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது.

இந்த ஆணையரகத்தின் கூடுதல் தொழிலாளர் ஆணையராக தமிழரசி பணிபுரிந்து வந்தார். இதனிடையே அவர் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மண்டலத்தில் கூடுதல் தொழிலாளர் ஆணையராக சாந்தி நியமிக்கப்பட்ட நிலையில், இன்று கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் அலுவலகத்திற்கு வந்த அவர் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருக்கு தொழிலாளர் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe