தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்- ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனை...

published 1 year ago

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்- ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனை...

கோவை: நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பல்வேறு ஊர்களில் உள்ள மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர். இதனால் பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது.

கோவை மாவட்டத்திலும் பேருந்து நிலையம் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. இந்நிலையில் கோவை ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளின் உடைமைகளும் ஸ்கேனிங்கிற்கு உட்படுத்தப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. 

பயணிகளின் பாதுகாப்புக் கருதியும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டும் ரயிலில் பட்டாசு பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் யாரேனும் பட்டாசுகளை எடுத்து செல்கிறார்களா என ரயில்வே போலீசார் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சோதனை செய்த பிறகே பொதுமக்கள் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனிடையே கோவை ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் பட்டாசு கொண்டு வந்ததாக தெரிந்த நிலையில் அவரை வெளியேற்றியுள்ளனர்.

ரயில்வே துறை ஆய்வாளர் கிரீஸ் தலைமையில் தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருகிறது. மேலும் ரயில்வே நிலையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குற்ற செயல்களை கண்டறிவதற்கும் பயணிகளின் நடவடிக்கையை கண்காணிப்பதற்கும் சிசிடிவி கேமராக்கள் மூலம் ரயில்வே போலீசார் 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe