கோவை மக்களே உங்க வீட்டிலேயும் குடிநீர் வரலையா?

published 1 year ago

கோவை மக்களே உங்க வீட்டிலேயும் குடிநீர் வரலையா?

கோவை: கோவையில் பல்வேறு பகுதிகளில் இன்று குடிநீர் வினியோகம் செய்யப்பட வாய்ப்பு இல்லை.

தீபாவளி பண்டிகை வந்துவிட்டது ஆனால் இன்னும் நல்ல தண்ணீர் வரவில்லை என்று கோவையின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சிலர் இன்று இரவு தண்ணீர் வந்து விடும் என்றும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கோவை மாவட்டத்தின் பிரதான குடிநீர் திட்டமான பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் தலைமை பணியிடமான பில்லூர் அணையில் கனமழை காரணமாக மரங்கள் உயர் அழுத்த மின் கம்பிகள் மீது விழுந்தன.

இதன் காரணத்தால் பதினொன்றாம் தேதி அதிகாலை 4.30 மணி அளவில் மின்தடை ஏற்பட்டு குடிநீர் பம்ப் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது போர்க்கால அடிப்படையில் மின்வாரியத்தினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

சீரமைப்பு பணிகள் முடிந்த பின் மின்விநியோகம் மற்றும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe