பட்டாசு வெடித்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட தகராறு-சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது...

published 1 year ago

பட்டாசு வெடித்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட தகராறு-சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது...

கோவை: கோவை அடுத்த துடியலூர் முத்து நகரை சேர்ந்தவர் செல்வகுமார்(38). நேற்று முன்தினம் வீட்டு முன்பு இவரது மகன் பட்டாசு வெடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 2 வாலிபர்களிடம் செல்வக்குமார் பட்டாசு வைக்கப்பட்டுள்ளது, இதனால் ஓரமாக செல்லுங்கள் என கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதில் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் தகாத வார்த்தைகளால் பேசி கீழே கிடந்த சிமெண்ட் சீட்டால் செல்வக்குமாரை தாக்கினர். மேலும் அதில் ஒருவர், செல்போனில் தொடர்பு கொண்டு மேலும் 2 பேரை அங்கு வரவழைத்தார். அவர்களும் செல்வக்குமாரை தாக்கி மிரட்டல் விடுத்தனர். தடுக்க முயன்ற பக்கத்து வீட்டு பெண் ஒருவரையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. 

இது குறித்து செல்வக்குமார் துடியலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் செல்வக்குமாரை தாக்கியது, போத்தனூர் செட்டிபாளையம் ஜேஜே நகரை சேர்ந்த தொழிலாளி நந்தகுமார்(20), துடியலூர் முத்துநகரை சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட 4 பேர் என்பது தெரியவந்தது. போலீசார் நந்தகுமார் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும் 2 பேர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe