வீட்டை காலி செய்ய சொன்னதால் வீட்டு உரிமையாளரை தாக்கிய வாலிபர்...

published 1 year ago

வீட்டை காலி செய்ய சொன்னதால் வீட்டு உரிமையாளரை தாக்கிய வாலிபர்...

கோவை: வீட்டை காலி செய்ய சொன்னதால் வீட்டு உரிமையாளரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
 

கோவை சுந்தராபுரம் காந்திநகர் 3வது தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன்(53). இவரது வீட்டில் டிரைவர் ஆனந்த்(37) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இந்நிலையில், ஆனந்த் குடிபோதையில் அக்கம்பக்கத்தினரிடம் சண்டையில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனை ஜானகிராமன் கண்டித்துள்ளார். மேலும் அவரை வீட்டை காலி செய்யும் படி கூறியுள்ளார். 

இதனால் இருவருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று ஆனந்த் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு உரிமையாளருக்கும், அவருக்கும் இடையே வீட்டை காலி செய்வது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த் தகாத வார்த்தைகளால் பேசி ஜானகிராமனை தாக்கினார். இதில் காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe