கோவையில் விபத்தில் வாலிபர்- முதியவர் பலி

published 2 years ago

கோவையில் விபத்தில் வாலிபர்- முதியவர் பலி

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/BAXr3lCHLQq5ShW9FLGZmG

கோவை : கோவை ஆழாந்துறை மாரி செட்டி வீதியைச் சேர்ந்தவர் சபரிநாதன் (வயது 21). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் கோவை- சிறுவாணி ரோட்டில் சென்றார். அப்போது ஆழாந்துறை அருகே வந்த போது அந்த வழியாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சபரிநாதன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார்.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆழாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று பொள்ளாச்சி அடுத்த சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்தவர் நடராஜ் (62). உத்துகாடு- ஜோதி நகர் ரோட்டில் நடந்து சென்றார்.

அப்போது சூளேஸ்வரன்பட்டி அருகே வந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் நடராஜ் மீது மோதி விட்டு நிற்காமல்  சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe