மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 7 பேர் கைது...

published 1 year ago

மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 7 பேர் கைது...

கோவை: கோவை சரவணம்பட்டியில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

கோவை சரவணம்பட்டி, பீளமேடு உள்ளிட்ட இடங்களில் மசாஜ் சென்டர்கள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. சில இடங்களில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் வருகின்றன. அதன்பேரில், போலீசார் மசாஜ் சென்டர்களில் அதிரடி சோதனை நடத்தி கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சரவணம்பட்டி பகுதியில் மூலை, முடுக்கெல்லாம் மசாஜ் சென்டர்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று நாமக்கல்லை சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவர் சத்தி ரோடு சிவானந்தபுரத்தில் உள்ள காம்ப்ளக்சில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டருக்கு சென்றார். அப்போது அங்கிருந்த மேலாளர் இங்கு நிறைய வடமாநில இளம்பெண்கள் உள்ளனர். நீங்கள் ஆசைப்பட்டால் அவர்களிடம் உல்லாசமாக இருக்கலாம் என கூறினார். 

இது குறித்து அந்த வாலிபர் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு மசாஜ் பெயரில் பாலியல் தொழிலில் இளம்பெண்கள் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மசாஜ் சென்டர் மேலாளர் லால் பகதூர்(25) மற்றும் மணிப்பூர், நாகலாந்தை சேர்ந்த 6 இளம்பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe