கோவையில் தீவிரமடைந்த பருவமழை : மாவட்ட நிர்வாகம் கொடுக்கும் அட்வைஸ் இது தான்..!

published 1 year ago

கோவையில் தீவிரமடைந்த பருவமழை : மாவட்ட நிர்வாகம் கொடுக்கும் அட்வைஸ் இது தான்..!

கோவை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் பழுதடைந்த கூரை வீடுகள், மண் சுவர் வீடுகள், சிதலமடைந்த கட்டிடங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் வெள்ள பெருக்கு அபாயம் உள்ளதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு குளிக்கவோ செல்ஃபி எடுக்கவோ அருகில் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe