நண்பனை பீர்பாட்டிலால் குத்திய கல்லூரி நண்பன்...

published 1 year ago

நண்பனை பீர்பாட்டிலால் குத்திய கல்லூரி நண்பன்...

கோவை: கோவையில் நண்பரை பீர்பாட்டிலால் குத்திய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டை சேர்ந்தவர் பார்த்திபன்(17). இவர் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள மாணவர் விடுதியில் தங்கி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது அறைக்கு மதுரை மேலூரை சேர்ந்த கோவையில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர் ஆதித்யன்(19) என்பவர் அடிக்கடி வருவது வழக்கம். இதேபோல், நேற்று ஆதித்யன், பார்த்திபனின் அறைக்கு சென்றார். அப்போது திடீரென அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. 

இதனைப்பார்த்த நண்பர்கள் அவர்களை விலக்கி விட்டு சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து பார்த்திபன் விடுதி வளாகத்தில் நின்றிருந்தார். அங்கு மீண்டும் வந்த ஆதித்யன் தகாத வார்த்தைகளால் பேசி பார்த்திபனை பீர்பாட்டிலால் குத்தினார். இதில் அவருக்கு தலை, முதுகு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மயங்கி விழுந்தார். இதனைபார்த்து அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் அவரை மீட்டு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 

இது குறித்த புகாரின் பேரில், சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நண்பரை பீர்பாட்டிலால் குத்திய கல்லூரி மாணவர் ஆதித்யனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe