மாநகராட்சி குடிநீர் மீட்டரை திருடி சென்ற நபர்கள் கைது....

published 1 year ago

மாநகராட்சி குடிநீர் மீட்டரை திருடி சென்ற நபர்கள் கைது....

கோவை: கோவை தெலுங்குபாளையம் பிரியா நகரை சேர்ந்தவர் மருதாச்சல மூர்த்தி(53). இவர் வெரைட்டிஹால் ரோடு பகுதியில் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இங்கு சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் குடிநீர் கணக்கீடு மீட்டரை பொருத்தி விட்டு சென்றனர். 

அதனை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்து மருதாச்சல மூர்த்தி வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், திருட்டில் ஈடுபட்டது கூலி தொழிலாளிகள் செல்வபுரம் சாஸ்தா நகரை சேர்ந்த கணேசன்(19), ஆண்டிபாளையம் அண்ணா காலனியை சேர்ந்த சஞ்சய்(23), செல்வபுரத்தை சேர்ந்த சன்பர்(21) என்பது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe