மது போதையில் ஆட்டோ டிரைவர் சாவு…

published 1 year ago

மது போதையில் ஆட்டோ டிரைவர் சாவு…

கோவை: கோவை செல்வபுரம் சொக்கம்புதூரை சேர்ந்தவர் மனோஜ்குமார்(34). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுகன்யா(29). மதுப்பழக்கம் உடைய மனோஜ்குமார் கடந்த சில நாட்களாக ஆட்டோ ஓட்ட செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை சுகன்யா தனது கணவரை எழுப்ப சென்றார். 

அப்போது அவர் பேச்சு, மூச்சின்றி மயங்கி கிடந்தார். உடனே அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தனது கணவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மனோஜ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe