பெண்ணை விபச்சாரியாக சித்தரித்து புகைப்படம் அனுப்பிய வாலிபர்- போலீசார் விசாரணை…

published 1 year ago

பெண்ணை விபச்சாரியாக சித்தரித்து புகைப்படம் அனுப்பிய வாலிபர்- போலீசார் விசாரணை…

கோவை: கோவை குனியமுத்தூர் அருகே உள்ள நரசீபுரத்தை சேர்ந்த 47 வயது பெண். இவர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் ஒப்பந்ததாரராக உள்ளார். இவரிடம் கோவை கோவில்மேட்டை சேர்ந்த 36 வயது வாலிபர் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். 

இந்நிலையில் வாலிபருக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வாலிபரை அவரது மனைவி பிரிந்து சென்றார். தனது மனைவி பிரிந்து சென்றதற்கு ஒப்பந்ததாரர் பெண் தான் காரணம் என வாலிபர் நினைத்தார். சம்பவத்தன்று வாலிபர் பெண் ஒப்பந்ததாரரின் செல்போன் எண்ணுக்கு அவரது புகைப்படத்தை விபச்சாரியாக சித்தரித்து அனுப்பினார். 

இதனை பார்த்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இது குறித்து குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe