தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு கன மழை அலர்ட்…! கலக்டர்களை அலர்ட் செய்த முதல்வர் ஸ்டாலின்!

published 1 year ago

தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு கன மழை அலர்ட்…! கலக்டர்களை அலர்ட் செய்த முதல்வர் ஸ்டாலின்!

கோவை: புயல் எச்சரிக்கையை ஒட்டி அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும், பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிறுக்கும்  நிலையில், புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் ( Michaung) என பெயரிடப்பட்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 800 கிலோமீட்டர் தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. 

இதனால், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் வட தமிழகத்தை நோக்கி வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமானது டிசம்பர் 3-ஆம் தேதி புயலாக வலுப்பெற்று 4-ஆம் தேதி மாலை கரையை கடக்க உள்ளது. அதன்படி, வட தமிழகத்தில் சென்னைக்கும், மசூலிப்பட்டினத்திற்கு இடையே புயல் கரையை கடக்கும் என கூறப்படுகிறது.

இதையடுத்து, பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயல் மற்றும் மழையையொட்டி தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், குறிப்பிட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், வேலூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந கூட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தின்போது, பல உயர் அதிகாரிகளுக்கும், 12 மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து பல்வேறு தமிழகத்தில் புயலால் ஏற்படும் தாக்கத்தை திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக பல்துறை மண்டல குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் மேலும் மழை, வெள்ள காலங்களில் மின்கசிவு ஏற்படுவதை தடுக்க மின்வாரியம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் அவரச சிகிச்சை பிரிவு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் ஆட்சியர்களுடன் கலந்தாலோசித்து அவர்களிடம் இவை அனைத்தும் திறம்பட செய்வதனை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe