மாஜி அரசு ஊழியர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற நபர்- துணிச்சலுடன் பிடிக்க முயன்ற பெண்...

published 1 year ago

மாஜி அரசு ஊழியர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற நபர்- துணிச்சலுடன் பிடிக்க முயன்ற பெண்...

கோவை:கோவையில் வீட்டுக்குள் புகுந்து மாஜி அரசு ஊழியர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற நபரை பிடித்த பெண்ணை தள்ளி விட்டு தப்பிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை குனியமுத்தூர் கோவைப்புதூர் பிரிவை சேர்ந்தவர் மணி(68). தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது மனைவி, மகள் மற்றும் பேரனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மணி தனது மனைவியுடன் கோயிலுக்கு சென்றார். வீட்டில் அவரது மகளும், பேரனும் இருந்தனர். வீட்டை பூட்டி விட்டு சாவியை ஜன்னல் ஓரத்தில் வைத்து விட்டு சென்றதாக தெரிகிறது. 

இதனை நோட்டமிட்ட மர்ம நபர் சாவியை எடுத்து கதவை திறந்து நைசாக வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். திடீரென சத்தம் கேட்டு எழுந்த மணியின் மகள் கொள்ளையனை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே கூச்சல் போட்ட அவர் கொள்ளைனை பிடிக்க முயன்றார். ஆனால் கொள்ளையன் அவரை கீழே தள்ளிவிட்டு தப்பித்தால் போதும் என அங்கிருந்து ஓடி விட்டார். 

இது குறித்து குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடிக்க முயன்ற நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe