கிணத்துக்கடவு அருகே கோவில் கதவை உடைத்து அம்மனின் தாலி உள்ளிட்ட நகைகள் கொள்ளை

published 2 years ago

கிணத்துக்கடவு அருகே கோவில் கதவை உடைத்து அம்மனின் தாலி உள்ளிட்ட நகைகள் கொள்ளை

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை :கிணத்துக்கடவு கோவிலின் முன்பக்க கதவை உடைத்த மர்ம நபர்கள் அம்மனின் தாலி, வளையல், செம்பு பாத்திரங்களை திருடிச் சென்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த கோதவாடி அருள்மிகு மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவில் உள்ளது. நேற்று இரவு கோவில் பூசாரி  முருகேசன் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலின் முன் பக்க கதவைப் பூட்டிச் சென்றார்.

தொடர்ந்து காலையில் கோவிலுக்குச் சென்றார். அப்போது கோவில் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது, அம்மன் கழுத்திலிருந்த தாலி, பித்தளை மற்றும் சென்பு பாத்திரங்கள், கோவில் மணி ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து கோவில் தக்கர் சரவணன் கிணத்துக்கடவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவில் நகைகளை திருடிய ஆசாமிகளைத் தேடி வருகின்றனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe