கோவை வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்... எதற்காக தெரியுமா..?

published 1 year ago

கோவை வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்... எதற்காக தெரியுமா..?

கோவை: தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் 18ம் தேதி கோவை வருகிறார்.

அரசு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 18ம் தேதி காலை 9.20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வருகிறார்.

மதியம் 2.10 மணிக்கு மீண்டும் விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார்.

இதற்கிடையே கோவையில் அமைய உள்ள  செம்மொழி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுகிறார்.  மேலும், ரூ.115 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தை திறந்து வைக்கிறார். 

இதனைத் தொடர்ந்து எஸ்.என்.ஆர் அரங்கத்தில் மக்களோடு முதல்வர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

கோவைக்கு முதலமைச்சர் வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட உள்ளன. எனவே 18ம் தேதி அவினாசி சாலை மற்றும் கோவையின் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது கோவை மக்களே.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe