கோவையில் முதலமைச்சர் : மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்

published 1 year ago

கோவையில் முதலமைச்சர் : மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்

கோவை:ராமகிருஷ்ணா கல்லூரியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

மக்களது கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பது தான் இந்த திட்டத்தின் சாராம்சமாக உள்ளது.

இதனிடையே வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறையினரிடம் கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe