பொள்ளாச்சியில் 'ஷாக்' அடித்து மின்வாரிய ஊழியர் பரிதாப பலி

published 2 years ago

பொள்ளாச்சியில் 'ஷாக்' அடித்து மின்வாரிய ஊழியர் பரிதாப பலி

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: பொள்ளாச்சியில் மின் கம்பத்தில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஷாக் அடித்ததில் பரிதாபமாக பலியானார்.

பொள்ளாச்சியை அடுத்த ஜமீன்முத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (60). இவர் மின்வாரிய ஊழியராக பணியாற்றி வந்தார். இதனிடையே பாலகிருஷ்ணன் நேற்று பி.ஏ.பி வாய்க்கால் அருகே மின் கம்பத்தில் ஏற்பட்ட பழுதை நீக்கிக் கொண்டிருந்தார்.

அப்போது பாலகிருஷ்ணன் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி தாலுக்கா போலீசார் அவரது உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மின் வாரிய ஊழியர் பணியின் போது உயிரிழந்தது சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe