தமிழகத்தில் 23 பேருக்கு கொரோனா உறுதி..! எந்த ஊரில் எவ்வளவு பாதிப்பு? முழு விவரம்

published 1 year ago

தமிழகத்தில் 23 பேருக்கு கொரோனா உறுதி..! எந்த ஊரில் எவ்வளவு பாதிப்பு? முழு விவரம்

கோவை: தமிழகத்தில் இன்று 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கேரளாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், கடந்த வாரத்தில் இருந்து தமிழகத்திலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனிடையே இன்றைய பாதிப்பு நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று மட்டும் 23 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 பேருக்கும், சென்னையில் 14 பேருக்கும், கோவையில் ஒருவருக்கும், திருவாரூரில் 3 பேருக்கும்,  திருவள்ளூர், திருப்பத்தூர், விழுப்புரத்தில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தற்போது வரை 104 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe