தேசிய அளவிலான கராத்தே போட்டி : தங்கத்தை தட்டித் தூக்கிய கோவை மாணவி...!

published 1 year ago

தேசிய அளவிலான கராத்தே போட்டி : தங்கத்தை தட்டித் தூக்கிய கோவை மாணவி...!

கோவை: தேசிய அளவிலான கராத்தே போட்டியில், கோவை  மாணவி தங்கபதக்கம் வென்றார்.

இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில், பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான 67வது கராத்தே போட்டி, டில்லியில், சத்ரசார் ஸ்டேடியத்தில்  
நடைபெற்றது.
இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, மாணவ மாணவியர் பல்வேறு எடைப்பிரிவுகளில் கட்டா மற்றும் குமித்தே போட்டிகளில் பங்கேற்றனர்.

தமிழக அணி சார்பில் பங்கேற்ற, கோவை கணபதி பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி மோனிஸ்ரீ , 17 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான, தனிநபர் குமித்தே போட்டியில், 48 கிலோ எடைக்கு உட்பட்டோருக்கான பிரிவில், தங்கபதக்கம் வென்றார்.
தங்கம் வென்ற மாணவிக்கும் பயிற்சியாளரும்  தமிழ்நாட்டு அணியின் மேலாளருமான  சென்சாய் கணேஷ்மூர்த்தி அவர்களுக்கு
கோவை விமான நிலையத்தில்   சின்கின் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .உலக கராத்தே கூட்டமைப்பின் நடுவர் சென்சாய் முத்து ராஜு மாணவியை பாராட்டி வாழ்த்தினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe