கோவையில் நிலம் வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ. 12 லட்சம் மோசடி

published 1 year ago

கோவையில் நிலம் வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ. 12 லட்சம் மோசடி

கோவை: கோவையில் நிலம் வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ. 12 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை குனியமுத்தூர் ஜேபி நகரை சேர்ந்தவர் ஜாஸ்மின்(43). இவர் தனது பழைய வீட்டை விட்டு கோவையில் நிலம் வாங்க முயற்சி செய்தார்.

அப்போது அவருக்கு கோவையை சேர்ந்த முகமத் ரபீக்(45) என்பவர் அறிமுகமானார். இதனை தொடர்ந்து ஜாஸ்மின் நிலம் வாங்குவதற்காக தனது பழைய வீட்டை விற்று ரூ. 12 லட்சத்தை முகமத் ரபீக்கிட்டம் கொடுத்ததாக தெரிகிறது.

ஆனால் அவர் பணம் பெற்று கொண்டு நீண்ட நாட்களாக ஆகியும் நிலம் வாங்கி கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார். ஜாஸ்மின் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோதும் அவர் கொடுக்க மறுத்து விட்டார்.

இது குறித்து ஜாஸ்மின் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவில் முகமத் ரபீக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe