'பார்ட் டைம்' வேலை என்று வாட்ஸ்-ஆப் மூலம் மசேஜ் அனுப்பிய கோவையில் பட்டாதரி பெண்ணிடம் ரூ.7 லட்சம் பறிப்பு

published 1 year ago

'பார்ட் டைம்' வேலை என்று வாட்ஸ்-ஆப் மூலம் மசேஜ் அனுப்பிய கோவையில் பட்டாதரி பெண்ணிடம் ரூ.7 லட்சம் பறிப்பு

கோவை: கோவையில் பகுதி நேர வேலை என கூறி ஆன்லைன் மூலம் ரூ. 7 லட்சம் மோசடி நடைபெற்றது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை வேலாண்டிபாளையம் சிவாஜி காலனி ஓம் நகரை சேர்ந்தவர் அனுசுயா(36). எம்பிஏ பட்டதாரி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது.

அதில், ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் உள்ள லிங்க்கை கிளிக் செய்து அனுசுயா தனது விவரங்களை பதிவு செய்தார். பின்னர் அவர் டெலிகிராம் குழுவில் இணைக்கப்பட்டார்.

அதில் இருந்து தொடர்பு கொண்ட ஒருவர், ஆன்லைனில் முதலீடு செய்து தாங்கள் கொடுக்கும் பணிகளை முடித்து கொடுத்தால் அதிகளவு வருமானம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார்.

இதனை உண்மை என நம்பிய அனுசுயா அந்த நபர் கூறிய வங்கி கணக்குகளில் வெவ்வேறு கட்டங்களாக ரூ. 6.95 லட்சம் அனுப்பினார். ஆனால் அவர் சொன்ன படி லாப தொகை கிடைக்கவில்லை. மீண்டும் அந்த நபரை டெலிகிராம் குழுவின் மூலம் தொடர்பு கொள்ள முயன்ற போது முடியவில்லை.

மொத்தமாக ஆன்லைன் வேலை என கூறி ரூ. 6.95 லட்சம் மோசடி செய்து விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அனுசுயா கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe