இன்ஜினியர் வீட்டில் நகை, பணம் திருட்டு…

published 1 year ago

இன்ஜினியர் வீட்டில் நகை, பணம் திருட்டு…

கோவை: கோவை ஆவாரம்பாளையம் கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்தவர் நவீன்குமார்(33). இன்ஜினியர். இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வேலை முடிந்து இரவில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 23 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது. 

உடனே அவர் இது குறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். வீட்டில் பதிவாகியிருந்த 2 கைரேகை பதிவுகளை கைப்பற்றினர். மேலும் இந்த திருட்டு குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe