வீரகேரளத்தில் மளிகை கடை தீப்பிடித்து ரூ. 6 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

published 1 year ago

வீரகேரளத்தில் மளிகை கடை தீப்பிடித்து ரூ. 6 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

கோவை: கோவை அடுத்த வீரகேரளம் பெரிய தோட்டம் காலனியை சேர்ந்தவர் ஜான்ராஜ் (54). இவர் வடவள்ளி புது தென்றல் நகரில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் வழக்கம்போல் கடையைத் திறந்த ஜான்ராஜ் வியாபாரத்தை முடித்துக் கொண்டு இரவு 11 மணி அளவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

பின்னர் நள்ளிரவு 2 மணி அளவில் அவரது கடைக்குள் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மள, மள என எரிய தொடங்கியது.  இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஜான்ராஜை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

மேலும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கடையில் இருந்த ரூ. 6 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடைபெற்று இருக்கலாம் என தெரிய வந்ததாக தெரிகிறது. மேலும் இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe