கோவையில் வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்த தந்தை கைது

published 2 years ago

கோவையில் வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்த தந்தை கைது

கோவை,ஜூலை.1- கோவை அருகே உள்ள மதுக்கரையை சேர்ந்த 38 வயது பெண். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். இவரது கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த பெயிண்டர்  பாலசுப்பிரமணியம் (வயது 48) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.  2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர். எனவே அவர் தனது மகள், மகன் ஆகியோருடன் பாலசுப்பிரமணியம் வீட்டில்  வசித்து வந்தார்.

பெண்ணின் மகள் தற்போது பிளஸ்-1 படித்து வருகிறார். இவரிடம் பாலசுப்பிரமணியம் ஆபாச வீடியோக்களை காண்பித்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். இது குறித்து மாணவி தனது தாயிடம் கூறியும் அவர் அதனைக் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து பாலசுப்பிரமணியத்தில் அத்துமீறல் அதிகரிக்கத் தொடங்கியது. தினசரி அவர் மாணவியை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

இந்த கொடுமை தாங்க முடியாத மாணவி இது குறித்து  தனது பள்ளி தலைமை ஆசிரியையிடம் தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாலசுப்பிரமணியத்தை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe