சிங்காநல்லூரில் வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது...

published 1 year ago

சிங்காநல்லூரில் வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது...

கோவை: கோவை சிங்காநல்லூரில் வாலிபரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் குருஷேத்ரன்(22). இவர் கோவை சிங்காநல்லூரில் தங்கி அங்குள்ள ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு குருஷேத்ரன், தனது உறவினரான ரோஹித் என்பவரின் இருசக்கர வாகனத்தை தனக்கு தெரிந்த ஒருவரிடம் கொடுத்து பழுது பார்த்து ஒப்படைத்தார். அதில், ரூ. 2 ஆயிரம் பணத்தை ரோஹித் பின்னர் கொடுப்பதாக தெரிவித்தார். 

இதனையடுத்து ரோஹித் நேற்று குருஷேத்ரனை தொடர்பு கொண்டு பொன்குமார் என்பவரிடம் ரூ. 2 ஆயிரம் கொடுத்துள்ளேன். அவரிடம் பெற்றுக்கொள்ளுமாறு கூறினார். இதனை தொடர்ந்து பொன்குமாரிடம் பணம் வாங்குவதற்காக குருஷேத்ரன் நேற்று சிங்காநல்லூர் குளத்தேரி பகுதிக்கு சென்றார். அப்போது பொன்குமார் மற்றும் அவரது நண்பர் அஜித் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, பணம் கொடுப்பது தொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பொன்குமார் மற்றும் அஜித் ஆகியோர் தகாத வார்த்தைகளால் பேசி குருஷேத்ரனை தாக்கினர். பொன்குமார் கத்தியால் குத்தியதில் குருஷேத்ரனின் கையில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை அங்கிருந்த சிலர் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 

இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குருஷேத்ரனை தாக்கிய பழனி பாண்டியன் நகரை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் பொன்குமார்(24) மற்றும் கோவை சிந்தாமணி புதூரை சேர்ந்த அஜித்(24) ஆகிய இருவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe