உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு

published 1 year ago

உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு

மதுரையில் நடைபெறும் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. அந்த வகையில் மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதியை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

அதன்படி, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஜனவரி 15ம் தேதி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து பாலமேட்டில் வரும் 16ம் தேதியும், அலங்காநல்லூரில் வரும் 17ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டி  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாடு பிடி வீரர்கள், காளைகள் பதிவு குறித்து சம்பந்தப்பட்ட துறையின் மூலமாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe