துடியலூர் அருகே டிரைவரை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்ய முயற்சி...

published 1 year ago

துடியலூர் அருகே டிரைவரை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்ய முயற்சி...

கோவை: கோவை அடுத்த துடியலூர் டாஸ்மாக் பார் அருகே டிரைவரை பீர்பாட்டிலால் குத்தி கொல்ல முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை துடியலூர் ஜி.என்.மில்ஸ் கேஎன்ஜி புதூரை சேர்ந்தவர் பாண்டியன்(33). டிரைவர். இவர் நேற்று அங்குள்ள டாஸ்மாக் பாருக்கு மது அருந்த சென்றார். பின்னர் அவர் மது போதையில் அங்கிருந்து வெளியே வந்தார். அப்போது வெளியே நின்றிருந்த 2 பேர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அழைத்தனர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் அங்கிருந்த பீர்பாட்டிலை உடைத்து அவரை குத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர். 

இதில் அவருக்கு வலது தோள் பட்டையில் குத்து விழுந்ததில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் டிரைவரை பாட்டிலால் குத்தி கொல்ல முயன்றது கோழி(எ) கோபிநாத், ஆசிப் என்பது தெரியவந்தது. இருவர் மீதும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe