மாஜி உதவி தலைமையாசிரியர் வீட்டில் 51 பவுன் நகை கொள்ளை...

published 1 year ago

மாஜி உதவி தலைமையாசிரியர் வீட்டில் 51 பவுன் நகை கொள்ளை...

கோவை: கோவையில் மாஜி உதவி தலைமையாசிரியர் வீட்டில் 51 பவுன் நகை கொள்ளை போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை நியூசித்தாபுதூரை சேர்ந்தவர் கிருஷ்ணன்(65). பள்ளியில் உதவி தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த ஆண்டு மே மாதம் 21ம் தேதி கிருஷ்ணன் தனது மனைவியுடன் வெளியூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கோவை திரும்பியவர்கள் தங்களது நகைகளை கழட்டி கப்போர்ட்டில் வைத்திருந்தனர். 

இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கோத்தகிரியில் நடைபெற்ற தங்களது உறவினர் வீட்டு பிறந்தநாள் விழாவுக்கு கிருஷ்ணன் தனது மனைவியுடன் சென்றார். அப்போது அவர்கள் கப்போர்ட்டில் நகையை வைத்து விட்டு அதனை பூட்டாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கோவை திரும்பியவர்கள் வீட்டில் வைத்திருந்த தங்க வளையல், தங்க செயின், பிளாட்டினம் உள்ளிட்ட 51 பவுன் தங்க நகைகளை திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே கிருஷ்ணன் இது குறித்து காட்டூர் போலீசில் புகார் அளித்தார். 

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கிருஷ்ணன் தனது வீட்டில் வேலை பார்த்த பெண் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு நின்றுவிட்டார். இதேபோல், ஏசி ரிப்பேர் செய்வதற்காக வீட்டுக்கு மெக்கானிக் ஒருவர் வந்து சென்றதாகவும், அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் கிருஷ்ணன் வீட்டுக்கு வந்து சென்றவர்கள் விவரம் குறித்து சேகரித்து நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe