கோவையில் குப்பை வண்டி ஓட்டிய கவுன்சிலர்- காரணம் இதுதான்...

published 1 year ago

கோவையில் குப்பை வண்டி ஓட்டிய கவுன்சிலர்- காரணம் இதுதான்...

கோவை: குப்பை வண்டி ஓட்டுபவர் சபரிமலைக்கு சென்றதால் தாமாக முன்வந்து குப்பை வண்டி ஓட்டிய 86வது கவுன்சிலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கோவை மாநகராட்சி 86வது வார்டு குப்பை வண்டி ஓட்டும் ஓட்டுநர் சபரிமலை சென்ற காரணத்தினால்தொடர்ந்து பல நாட்களாக வீடு வீடாக சென்று குப்பைகள் எடுக்கும் பணி நடைபெறாமல் இருந்துள்ளது. இதனை அறிந்த அந்த வார்டின் மனிதநேய மக்கள் கட்சியின் மாமன்ற உறுப்பினர்அஹமது கபீர் அன்பு நகர் பகுதியில் உள்ள வீடுகளில் தேங்கியுள்ள குப்பைகளை பெறுவதற்கு குப்பைகளை சேகரிக்கும் நான்கு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று வீடுகளில் உள்ள குப்பைகளை பெறும் பணியில் ஈடுபட்டார்.

வாகன ஓட்டுநர் விடுமுறையில் சென்றதால் தாமாக முன்வந்து வாகனத்தை இயக்கிய மாமன்ற உறுப்பினர் அஹமது கபீரை வார்டு பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe