கோவையில் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணி

published 1 year ago

கோவையில் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணி

கோவை: சாலை பாதுகாப்பு குறித்து கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 500 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கைகளில் பதாகைகள் ஏந்தி சென்றனர்.

கோவை மாவட்டத்தில் தினந்தோறும் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை கோவை மாநகர காவல் துறை மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது வருகிறது.

இந்நிலையில் கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து சாலையில் மாநகர காவல் துறையினருடன் இணைந்து கோவை ராமகிருஷ்ணா கல்லூரி மாணவ மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதனை கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சிற்றரசு கொடி அசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஹெல்மெட்,சீட் பெல்ட் அவசியம், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டாதீர்கள் உள்ளிட்ட பதாகைகள் ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe