வீட்டில் 3 1/2 பவுன் நகை, பணம் மாயம்…

published 1 year ago

வீட்டில் 3 1/2 பவுன் நகை, பணம் மாயம்…

கோவை: கோவை கணபதி எப்சிஐ ரோட்டை சேர்ந்தவர் ரெஜினி(46). இவரது வீட்டில் கடந்த நவம்பர் மாதம் ஆவாரம்பாளையத்தை சேர்ந்த தரணி என்ற பெண் வேலைக்கு சேர்ந்தார். அவர் வேலைக்கு சேர்ந்தது முதல் வீட்டில் சிறிது, சிறிதாக பணம் மற்றும் நகைகள் காணாமல் போயுள்ளது. இந்த நிலையில், கடந்த 1ம் தேதி வீட்டில் இருந்த 3 1/2 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 10 ஆயிரம் திருடு போயிருப்பது ரெஜினிக்கு தெரியவந்தது. 

அதன்பின்னர் தரணி வேலைக்கு வரவில்லை என்று தெரிகிறது. இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த ரெஜினி இது குறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடியது யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe