கோவையில் வீடு விற்ற பணத்தை திரும்ப வழங்காத கட்டுமான நிறுவனத்தின் மீது புகார்.!

published 1 year ago

கோவையில் வீடு விற்ற பணத்தை திரும்ப வழங்காத கட்டுமான நிறுவனத்தின் மீது புகார்.!

கோவை: கோவை சிங்காநல்லூர் வெள்ளலூர் ரோட்டை சேர்ந்தவர் ரிச்சர்ட் ஜெனித்(30). இவர் தனது சகோதரர் காட்வின் ஜெனித் என்பவருடன் சேர்ந்து கடந்த 2018ம் ஆண்டு பட்டணம் பகுதியில் 6 சென்ட் நிலம் வாங்கி வீடு கட்டினர்.

பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக அதனை விற்க முடிவு செய்தனர். அதற்காக காட்டூரில் உள்ள கட்டுமான நிறுவனத்தினரை தொடர்பு கொண்டனர்.

பின்னர் கட்டுமான நிறுவனத்தினர் ரிச்சர்டு ஜெனித் வீட்டை ரூ. 45 லட்சத்துக்கு தரணி என்ற பெண்ணிடம் விற்பனை செய்து கொடுத்தனர். ரூ. 45 லட்சத்தில் வங்கி லோன் போக மீதமுள்ள ரூ. 18.50 லட்சத்தை தரணி ரிச்சர்ட் ஜெனித்திடம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், தொழில் பயன்பாட்டுக்காக ரூ.18.50 லட்சத்தை தருமாறும், சிறிது நாளில் திருப்பி கொடுத்து விடுவதாக கட்டுமான நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ரிச்சர்ட் ஜெனித்திடம் கேட்டனர்.

இதனையடுத்து ரிச்சர்டு ஜெனித் ரூ. 18.50 லட்சத்தை கட்டுமான நிறுவனத்தினரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் பணத்தை பெற்று நீண்ட நாட்கள் ஆகியும் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் கடத்தி வந்தனர்.

இதனால் ஏமாற்றமடைந்த ரிச்சர்ட் ஜெனித் இது குறித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த சாஜூ ஜார்ஜ் தாமஸ், டயானா பிரான்சிஸ், ஜெயக்குமார், ராஜேந்திர பிரபு ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe