மதுரையில் தொடங்கியது ஜல்லிக்கட்டு.. என்னென்ன பரிசுகள் தெரியுமா?

published 1 year ago

மதுரையில் தொடங்கியது ஜல்லிக்கட்டு.. என்னென்ன பரிசுகள் தெரியுமா?

மதுரை: மதுரையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று காளைகளை பிடிக்கும் வீரர்களுக்கு பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கலை முன்னிட்டு நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் நிலையில், உலகப்புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது.   அமைச்சர் மூர்த்தி இந்த விளையாட்டுப் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த போட்டியில் 1000 காளைகளும் 700 காளையர்களும் பங்கேற்றி அசத்தி வருகின்றனர். 

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை சுற்றி இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  இதனிடையே ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றனர். தலையணை, மெத்தை, அண்டா, சேர், ஃபேன், மெத்தை, கட்டில், பீரோ, கிஃப்ட் பேக், தங்க நாணயம், சைக்கிள், பைக் மற்றும் கார் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe