பள்ளி வாகனம் மோதி அதே பள்ளியை சேர்ந்த சிறுவன் பரிதாப பலி...!

published 1 year ago

பள்ளி வாகனம் மோதி அதே பள்ளியை சேர்ந்த சிறுவன் பரிதாப பலி...!

திருப்பூர்: திருப்பூரில் தனியார் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் அதே பள்ளியில் பயிலும் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பெத்தாம்பாளையத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சாய்சரண் என்ற 6 வயது சிறுவன் படித்து வந்தார்.

இதனிடையே பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவன் மீது அதே பள்ளியை சேர்ந்த வாகனம் மோதியதில் சிறுவன் பரிதாபமாக பலியானார்.

விபத்தை ஏற்படுத்திய பள்ளி வாகனத்தின் ஓட்டுநர் அங்கிருந்து ஓடி தலைமறைவாகியுள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe