கோவை அருகே வாகனத்தை மறித்து பணம் பறித்த மர்ம கும்பல்

published 2 years ago

கோவை அருகே வாகனத்தை மறித்து பணம் பறித்த மர்ம கும்பல்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/EjTtcBnBSk61kfgvff3n15   

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே புஜங்கனூர் பகுதியில் பழங்கள் மற்றும் இதர பொருட்கள் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலையில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் திராட்சை, முந்திரி, பெருங்காயம் ஆகியவற்றை மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மொத்த விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று பொருட்களை மினி வேனில் எடுத்துக் கொண்டு அங்கு வேலை செய்யும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இலியாஸ் அஹமத் (வயது 19) என்பவரும் அவருடன் ஜிபன் நோமோசுத்ரா (19)என்பவரும் விற்பனைக்காக சென்றனர்.

விற்பனை முடித்துவிட்டு பணத்தை வசூல் செய்து மீண்டும் 2 பேரும் புஜங்கனூர் உள்ள தொழிற்சாலைக்கு மினி வேனில் வந்தனர். அப்போது கட்டாஞ்சி மலை, தண்டி பெருமாள் கோவில் அருகே வந்தபோது மர்ம நபர்கள் 3 பேர் மினி வேனை வழிமறித்து கண்ணாடியை உடைத்தனர்.

தொடர்ந்து மர்ம நபர்கள் அவர்களிடம் இருந்த வசூல் பணம் ரூ.30 ஆயிரத்தை பறிக்க முயன்றனர். அப்போது சுதாரித்துக் கொண்ட தொழிலாளர்கள் 2 பேரும் அவர்களிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தை வாகனத்திற்குள் பதுக்கினர்.

அவர்கள் கையில் இருந்த ரூ.10 ஆயிரத்தை மட்டும் மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு அவர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். பயந்துபோன இலியாஸ் அஹமத் மற்றும் ஜிபன் நோமோசுத்ரா புஜங்கனூர் தொழிற்சாலை வந்து உரிமையாளரிடம் சம்பவம் குறித்து கூறினர்.

இதையடுத்து இலியாஸ் அஹமத் காரமடை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe