கட்டிட தொழிலாளியிடம் கத்திமுனையில் செல்போன் பறிப்பு- போலிசார் விசாரணை...

published 1 year ago

கட்டிட தொழிலாளியிடம் கத்திமுனையில் செல்போன் பறிப்பு- போலிசார் விசாரணை...

கோவை: கோவை உப்பிலிபாளையம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார்(47). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் உடையாம்பாளையத்தில் உள்ள பள்ளிக்கூடம் அருகே சென்றபோது அவரை வழிமறித்த மர்மநபர் கத்திமுனையில் மிரட்டி முத்துக்குமாரின் செல்போனை பறித்தார். மேலும் அவரிடம் பணம் தருமாறு மிரட்டினார். 

அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர் முத்துக்குமாரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe