சாய்பாபா காலனி பகுதியில் ஜெய் ஸ்ரீராம் பேனர் வைத்த பாஜக நிர்வாகி- போலிசார் வழக்குப்பதிவு...

published 1 year ago

சாய்பாபா காலனி பகுதியில் ஜெய் ஸ்ரீராம் பேனர் வைத்த பாஜக நிர்வாகி- போலிசார் வழக்குப்பதிவு...

கோவை: கோவையில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ வாசகத்துடன் அனுமதியின்றி பேனர் வைத்த பாஜக உறுப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை சாயிபாபா காலனி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கேகே புதூர் அரசடி விநாயகர் கோயில் அருகே ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற வாசகத்துடன் 8*8 என்ற அளவில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. விசாரணையில், பாஜக உறுப்பினர் தாமரைக்கண்ணன் என்பவர் உரிய அனுமதியின்றி பேனர் வைத்தது தெரியவந்தது. 

இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக தாமரைக்கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe