ஓவர் டைம் வேலை பார்த்ததில் தகராறு- சக ஊழியரை கத்தியால் குத்திய செக்யூரிட்டியால் புலியகுளத்தில் பரபரப்பு...

published 1 year ago

ஓவர் டைம் வேலை பார்த்ததில் தகராறு- சக ஊழியரை கத்தியால் குத்திய செக்யூரிட்டியால் புலியகுளத்தில் பரபரப்பு...

கோவை: கோவையில் ஓவர் டைம் வேலை பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் ஊழியரை கத்தியால் குத்திய செக்யூரிட்டியை போலீசார் கைது செய்தனர்.
 

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் முருகேசன்(46). இவர் கோவை புலியகுளத்தில் தங்கியிருந்து தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இவருக்கும் சக செக்யூரிட்டியான சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தங்கராசு(50) என்பவருக்கும் அடிக்கடி ஓவர் டைம் பார்ப்பதில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல், நேற்று இரவு சுங்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருவருக்கும் இடையே வேலை பார்ப்பதில் மீண்டும் சண்டை ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த தங்கராசு கத்தியால் முருகேசனை குத்தினார். இதில் வயிற்றில் குத்து விழுந்ததில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்தார். 

அக்கம்பக்கத்தினர் முருகேசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து செக்யூரிட்டி தங்கராசுவை கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe