கோவையில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 6.60 லட்சம் மோசடி...

published 1 year ago

கோவையில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 6.60 லட்சம் மோசடி...

கோவை: கோவையில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 6.60 லட்சம் மோசடி செய்ததாக பள்ளி ஆசிரியை உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை புலியகுளம் அலமேலு மங்கம்மாள் லே-அவுட்டை சேர்ந்தவர் பூபதி(36). இவருக்கு கோவை வடவள்ளி சுண்டபாளையத்தை சேர்ந்த அன்புசிவா மற்றும் பாக்கியலட்சுமி ஆகியோர் அறிமுகமாகினர். பாக்கியலட்சுமி மருதமலை அரசு மேல்நிலைபள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இருவரும் பூபதிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக 2 கட்டங்களாக ரூ. 7.15 லட்சம் பெற்றதாக தெரிகிறது. ஆனால் பணத்தை பெற்று கொண்டு நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது ரூ. 55 ஆயிரம் மட்டும் கொடுத்துள்ளனர். மீதமுள்ள ரூ. 6.60 லட்சத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தனர். மேலும் மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். 

இது குறித்து பூபதி வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 6.60 லட்சம் மோசடி செய்ததாக அன்புசிவா மற்றும் அரசு பள்ளி ஆசிரியை பாக்கியலட்சுமி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe